திரிணாமுல் காங். எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா& கட்சியில் இருந்து விலகல்
1 min readTrinamool Cong. MLA Sudden resignation – resignation from the party
29.1.2021
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான ரஜிப் பானர்ஜி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.
பாரதீய ஜனதா
மேற்கு வங்காள மாநிலத்தில் விரைவில் சட்டசபைக்கு தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதீய ஜனதா இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மம்தா பானர்ஜி 3-வது முறையாக ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று முனைப்புடன் செயல்படுகிறார். பாரதீய ஜனதா கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது.
அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து சுவேந்து அதிகாரியை பா.ஜனதா தங்கள் பக்கம் இழுத்துள்ளது. மேலும் சில எம்எல்ஏ-க்களை இழுத்துள்ளது.
ராஜினாமா
இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.-வாகவுமான ரஜிப் பானர்ஜி இன்று( வெள்ளிக்கிழமை) எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்திற்குள் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
அவர் விரைவில் பாரதீய ஜனதாவில் இணையவார் என்று கூறப்படுகிறது.