April 20, 2024

Seithi Saral

Tamil News Channel

கர்நாடகாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 டாக்டர்களுக்கு கொரோனா

1 min read

Corona for 5 doctors vaccinated in Karnataka

30.1.2021

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி

கர்நாடகத்தில் தற்போது கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி டாக்டர்கள், நர்சுகள், சுகாதார ஊழியர்கள் போன்றோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் டாக்டர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அவர்களில் 5 பேருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள 5 பேரில் 2 பேர் கோவிட் ஷீல்டு தடுப்பூசியும், 3 கோவேக்சின் தடுப்பூசின் போட்டுக்கொண்டவர்கள் ஆவர். அவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

சிகிச்சை

அந்த பரிசோதனை அறிக்கை நேற்று வந்தது. அப்போது அந்த அறிக்கையில் 5 டாக்டர்களுக்கும் கொரோனா தொற்று பாதித்து ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததன் காரணமாக அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு உள்ளான 5 டாக்டர்களும் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்று மாவட்ட சுகாதார துறையினர் தெரிவித்து உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.