தமிழகத்தில் இன்று 505 பேருக்கு கொரோனா
1 min readCorona for 505 people in Tamil Nadu today
30.1.2021
தமிழகத்தில் இன்று 505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி இன்று (சனிக்கிழமை) மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,37,832 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5 பேர் கொரோனாவுக்கு இறந்தள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,350 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 526 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 8,20,907 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் 4,575 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மராட்டிய மாநிலம்
மராட்டிய மாநிலத்தில் இன்று 2,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,23,814 ஆக உயாந்துள்ளது.
மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 42 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51,042 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் அந்த மாநிலத்தில் 1,535 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 19,27,335 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது அந்த மாநிலம் முழுவதும் தற்போது 44,199 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆந்திரா
ஆந்திராவில் இன்று 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,87,720 ஆக உயாந்துள்ளது. ஆந்திராவில் இதுவரை 7,153 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். அந்த மாநிலத்தில் இதுவரை மொத்தம் 8,79,278 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 1,289 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.