April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

அ.தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம்; பாரதீய ஜனதா அறவிப்பு

1 min read

We will meet the election together with the AIADMK; Bharatiya Janata Party declaration

30.1.2021

தமிழக சட்டப்பேரவை தேர்தலை அ.தி.மு.க. இணைந்து சந்திப்போம் என்று பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் அரசியில் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே தி.மு..க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். இப்போது பாரதீய ஜனதாவும் பிரசாரத்தில் குதித்துவிட்டது-.
அந்தக் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று ( வெள்ளிக்கிழமை) தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஜே.பி.நட்டா சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து மதுரையில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஜே.பி.நட்டா வேட்டி, சட்டை அணிந்து மேடைக்கு வந்தார். அவர் பேசும்போது, பாஜக-அதிமுக இணைந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் பாஜக ஆட்சியில் சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரைக்கு அதிகளவில் வளர்ச்சி கட்டமைப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.