சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் திட்டங்கள்
1 min readAdditional plans in the budget for states where assembly elections are to take place
1.2.2021
விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களுக்கு கூடுதல் திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டமன்றத் தேர்தல்
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களுக்கு இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்களின் ஓட்டை கவர்வதற்காக இப்படி திட்டங்களை அறிவித்ததாக கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், ரூ.1.03 லட்சம் கோடி முதலீட்டில் 3500 கி.மீ தூர தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை அறிவித்தார். இதில் மதுரை&கொல்லம் சாலை மற்றும் சித்தூர்-&தாட்சூர் சாலை ஆகியவை அடங்கும். இந்த திட்டங்கள் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்றும் பெட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னையில் ரூ.63 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ 2வது கட்ட திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளா
கேரளா மாநிலத்தில் கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், பரதீப் மற்றும் பெட்டுகாட் ஆகிய 5 முக்கிய மீன்பிடித் துறைமுகங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையங்களாக உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மும்பை&-கன்னியாகுமரி நடைபாதையின் 600 கி.மீ உள்பட ரூ. 65,000 கோடி முதலீட்டில் கேரள மாநிலத்தில் 1100 கி.மீ தேசிய நெடுஞ்சாலை பணிகள் அறிவிக்கப்பட்டது.
மேற்கு வங்காள மாநிலத்தில் ரூ. 25,000 கோடி செலவில் கொல்கத்தா-சிலிகுரி சாலை மேம்படுத்துதல் உட்பட 6700 கி.மீ நெடுஞ்சாலை பணிகளை அறிவித்தார்.
அசாம்
அசாம் மாநிலத்தில் தற்போது ரூ. 19000 கோடியில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருவதாக சீதாராமன் தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில் அசாம் மாநிலத்தில் 1300 கி.மீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய ரூ. 34,000 கோடி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.