May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

பிப்ரவரி – 2021 மாத ராசிபலன்கள்

2 min read
February 2021-Rasi Palangal /Kaliyur Narayanan


மேஷம்


மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் புதன் சாதகமான இடத்தில் இருக்கிறார். சூரியன் 13-ந் தேதி இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். மேலும் சுக்கிரன் 22-ந் தேதிக்கு பிறகு நற்பலனை கொடுப்பார். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக முடிக்க சூரியன் மிகவும் உறுதுணையாக இருப்பார். 12-ந் தேதிக்கு பிறகு அவரால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசின் உதவி கிட்டும். புதனால் பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும். அவரால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும்.
குடும்பம்: பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். செல்வாக்கு மேம்படும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். 22-ந் தேதிக்கு பிறகு பண வரவு கூடும். சொந்தபந்தங்கள் வருகையும் அவர்களால் நன்மை கிடைக்கும். அதே நேரம் 24,25 ஆகிய தேதிகளில் அவர்கள் வகையில் வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். 22,23-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.17,18-ந் தேதிகளில் சகோதரிகள் வகையில் ஒற்றுமை மேம்படும். அவர்களால் முன்னேற்றம் காணலாம்.
உத்தியோகம்: தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 10,11-ந் தேதிகளில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். 12-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.மேல் அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும்.
வணிகம்: நஷ்டம் தவிர்க்கப்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். 14,15,16,19,20,21-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். அதே நேரம் 1,, 2-ந் தேதிகளில் சந்திரன் எதிர்பாராத பணவரவை தருவார். 12-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
பொதுநலம்: கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்து வந்த தொல்லைகள், அவப்பெயர் , போட்டிகள் முதலியன 22-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் சுமாரான பலனை காண்பர். 18-ந் தேதிக்கு பிறகு வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். 26,27,28-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: இந்த மாதம் புதனால் அனுகூலமாக இருக்கும். கல்வி வளம் பெருகும். கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். போட்டிகளில் வெற்றி காணலாம். ஆசிரியரிடம் நன்மதிப்பு கூடும். நற்பெயரை எடுப்பர்.
விவசாயம்: சீரான வருமானம் கிடைக்கும். பாசி பயறு நெல், காய்கறிகள், கீரை, பழவகைகள், பயறு வகைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம்.கால்நடை செல்வம் பெருகும்.பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
பெண்கள்: குதூகலமாக இருப்பர். கணவரின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.பதவி உயர்வு காண்பர்.3,4,5-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையுயம். விருந்து விழா என சென்று வருவீர்கள். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்
உடல்நலம்: சூரியனால் உடல் உபாதைகள் பூரண குணம் அடையும். 8,9-ந் தேதிகளில் சந்திரனால் வயிறு தொடர்பான பிரச்சிரனை வரலாம்.சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.6,7-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. அமைதியை கடைபிடிக்கவும்.
அதிர்ஷ்டம்: 3,9 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். பச்சை, செந்தூரம் நலம் தரும் நிறங்கள்.1,2,3,4,5,10,11,12,13,17,18,22,23.ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். மேலும் கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாய்க் கிழமை அம்மனையும் வணங்க வேண்டும். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். 22-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை சுக்கினுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

              ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் பிற்பகுதியில் கூடுதல் பலன்களை எதிர்பார்க்கலாம். சூரியன் 13-ந் தேதி சாதகமாக வந்து நற்பலன்களை கொடுப்பார். சுக்கிரனால் 22-ந் தேதி வரை உங்களுக்கு சாதகபலன்தான் கிடைக்கும். மேலும் குரு மாதம் முழுவதும் நன்மை தருவார். பொருளாதார வளம் இருக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். சிக்கனம் தேவை. சுக்கிரன் சாதகமான நிலையில் இருப்தால் பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும்.
குடும்பம்: திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பண வரவு இருக்கும். வசதிகள் பெருகும். சந்தோஷமும் ஆனந்தமும் அதிகரிக்கும்.14,15,16-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 26,27,28-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.19,20,21-ந் தேதிகளில் சகோதரிகளால் முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும். அவர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். புதனால் சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். விட்டுக் கொடுத்து போகவும்.
உத்தியோகம்: தனியார்துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 12.13-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. 13-ந் தேதிக்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும்.பதவி உயர்வு காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்கும். சற்று முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும்.வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை.
வியாபாரிகள்: பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 17,18,22,23 ஆகிய தேதிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். 3,4,5-ந் தேதிகளில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். புதனால் சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் பெறுவர். புகழ், பாராட்டு கிடைக்கும் . சிலர் பெண்கள் மூலம் உயர்ந்த அந்தஸ்தை பெறலாம். 22-ந் தேதிக்கு பிறகு எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். போட்டிகள்அதிகம் இருக்கும். அவப்பெயர் உருவாகலாம். பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காணலாம். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். 1,2-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.பொருள் விரயம் ஏற்படலாம்.
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிப்பது நல்லது புதன் சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். கவனம் தேவை.
விவசாயிகள் நல்ல மகசூலை பெறுவர். நெல், சோளம், மஞ்சள், பயறு போன்ற பயிர்களில் நல்ல வருமானம் இருக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம்.
பெண்கள்: சிறப்பான நிலையில் இருப்பர். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். கணவரின் அன்பு கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரணையுடன் இருப்பீர்கள். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறை இருக்காது. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் கோரிக்கைகளை 22-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். 24,25-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 6,7 ஆகிய தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும்.
உடல்நலம்: பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் 18-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும். 10,11ஆகிய தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.8,9-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. தூரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம். அமைதியை கடைபிடிக்கவும்.
அதிர்ஷ்டம்: மஞ்சள் 12-ந் தேதிக்கு பிறகு செந்தூரம், அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் ஆகும். 2,3 யோகம் தரும் எண்கள்.3,4,5,6,7,12,13,14,15,16,19,20,21,24,25. ஆகிய தேதிகள் அனுகூலத்தை தரும் நாட்கள் ஆகும்.
வழிபாடு: சனிக்கிழமை பெருமாள் கோவிக்கு சென்று வரலாம். ஆஞ்சநேயர் வழிபாடு ஆறுதலையும், மகத்தான முன்னேற்றத்தையும் கொடுக்கும். கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். மேலும் காளி வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். முருகன் கோவிலுக்கு சென்று துவரை தானம் செய்தால் பொருள் விரயம் மறையும். 12-ந் தேதிவரை சூரியனை வழிபட தவறாதீர்கள்.

                   மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் செவ்வாய் 18-ந் தேதி வரை நன்மை கொடுப்பார். மேலும் புதன்,சுக்கிரன்,கேது மாதம் முழுவதும் நற்பலனை தருவார்கள். இதனால் பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. காரிய அனுகூலம் ஏற்படும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
குடும்பம்: உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக 22,23-ந் தேதிகளில் பெண்கள் மூலம் உதவிகள் அதிகமாக கிடைக்கும். 1,2-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் 17,18-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் இருக்கும். சுக்கிரனால் வசதிகள் பெருகும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சூரியனால் 12-ந் தேதிக்கு பிறகு அவப்பெயர் வர வாய்ப்பு உண்டு. எனவே வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும்.
உத்தியோகம்:கோரிக்கைகள் நிறைவேறும். சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்பு இருக்கிறது. மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். 14,15,16-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் செவ்வாயின் பலத்தால் மேன்மை காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 18-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
வியாபாரம்: பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.அரசு வகையில் இருந்து வந்த பிரச்சினை 12-ந் தேதிக்கு பிறகு இருக்காது. அது வரை வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வாடிக்கையாளரை அதிக முயர்ச்சி எடுத்து தக்கவைக்க வேண்டியது இருக்கும் 19,20,21,24,25-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 6,7-ந் தேதிகளில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
கலைஞர்கள்: பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் முன்னேற்றம் காணலாம். முக்கிய பொறுப்பு கிடைக்கும்.புதிய பதவியோடு பண வரவையும் காணலாம்.
மாணவர்கள்:கல்வியில் சிறந்த நிலையில் இருப்பர். புதன் சாதகமாக இருப்பதால் முன்னேற்ற பாதையில் செல்வர். போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகள்: உழைப்புக்கேற்ற வருமானத்தை பெறலாம். பசு-கன்றுகள் மூலம் நல்ல பணப்புழக்கத்தை எதிர்பார்க்கலாம் வருமானம் அதிகரிக்கும். கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. புதிய சொத்து வாங்கும் எண்ணம் 18-ந் தேதிக்குள் கைகூடும்.
பெண்கள்:குடும்பத்தரிடம் நன்மதிப்பை பெறுவர். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு நல்ல பண வரவு இருக்கும். பெண் காவலர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவும் சகஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.8,9-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 26,27,28-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் கிடைக்கலாம்.
உடல்நலம்: ஆரோக்கியம் மேம்படும் 18-ந் தேதிக்கு பிறகு பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பொருள் விரயம் ஏற்படலாம். பயணத்தின் போது கவனம் தேவை. 12,13-ந் தேதிகளில் வயிறு தொடர்பான பிரச்சினை வரலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும்.10,11-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. மௌனவிரதத்தை கடைபிடிப்பது நல்லது.
அதிர்ஷ்டம்:அதிர்ஷ்ட எண்கள் 5,7. பச்சை, சிவப்பு அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் ஆகும்.6,7,8,9,14,15,16,17,18,22,23,26,27,28. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம்.தினமும் காலையில் சூரியனையும் வழிபடவும். 22-ந் தேதிக்கு பிறகு தினமும் வீட்டில் விளக்கு எற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கினுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பார்வையற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

                  கடகம் 

கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் குரு, ராகு சாதகமாக இருக்கிறார்கள். மேலும் செவ்வாய் 18-ந் தேதிக்கு பிறகும், சுக்கிரன் 22-ந் தேதிக்கு பிறகும் சாதகமான இடத்துக்கு வந்து நற்பலனை தருவார்கள்.அப்போது அவர்களால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
குடும்பம் குரு பகவான் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். 22-ந் தேதிக்கு பிறகு வசதிகள் பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.3,4,5-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் வீண் பகை வரவாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் 19,20,21-ந் தேதிகளில் உறவினர்களால் முன்னேற்றம் இருக்கும். 24,25-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர். 18-ந் தேதிக்கு பிறகு புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர், அலைச்சல், சோர்வு வயிறு தொடர்பான உபாதைகள் முதலியன 12-ந் தேதிக்கு பிறகு இருக்காது. ஆனால் அதன்பிறகு அரசு வகையில் அனுகூலம் இல்லை.
உத்தியோகம்: கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பதவி உயர்வு காண்பர்.11,12-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம். 12-ந் தேதிக்கு பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். 18-ந் தேதிக்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
வணிகம்: முன்னேற்றம் காண்பர். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 12-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். 22,23, 26,27,28-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 8,9-ந் தேதிகளில் எதிர்பராத வருவாய் கிடைக்கும்.
பொதுநலம்: கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 22-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். 18-ந் தேதிக்கு பிறகு அதற்கான பலன் கிடைக்கும். அப்போது நல்ல பெயரையும், வளத்தையும் பெறுவர்.
மாணவர்கள்: குரு சாதகமான நிலையில் இருப்பதால் ஆசிரியர்கள்,ஆன்றோர்கள் உதவி கிடைக்கும்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயம்: துவரை,கொண்டைக்கடலை சோளம், மஞ்சள்,கீரை, காய்கறி வகைகளில் நல்ல மகசூலை காணலாம். 18-ந் தேதிக்கு பிறகு கோழி, ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள்: பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். சகோதரர்கள் மிக உறுதுணையாக இருப்பர். 1,2-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. பிறந்த வீட்டில் இருந்து உதவி கிட்டும். 10,11-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். செவ்வாயால் இருந்து வந்த திருட்டு, களவு பயம், உறவினர்கள் வகையில் ஏற்பட்டமனக்கிலேசம் பொருள் இழப்பு முதலியன18-ந் தேதிக்கு பிறகு மறையும். நெருப்பு தொடர்பான அச்சம் அறவே நீங்கும். அதன்பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள்நற்பலன் கிடைக்க பெறுவர். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.
உடல்நலம்: பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.செவ்வாயால் இருந்து வந்த உஷ்ணம், தோல், தொடர்பான நோய் முதலியன 18-ந் தேதிக்கு பிறகு மறையும். 12,13-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. தூரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம். 14,15,16-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
அதிர்ஷ்டம்-8,9 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள். மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும். 1,2,8,9,10,11,17,18,19,20,21,24,25ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட நாட்கள் ஆகும்.
வழிபாடு: தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள்.புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பார்வை யற்றவர்களுக்கு உதவுங்கள். 18-ந் தேதி வரை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஏழைகளுக்குதுவரை தானம் செய்யலாம். 22-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி வழிபடுங்கள்.

                சிம்மம் 

சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் முற்பகுதியில் அதிக பலனை காணலாம். சூரியன் 12-ந் தேதி வரையில் நற்பலனை கொடுப்பார். புதன்,சனி ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். பொருளாதார வளம் சீராக இருக்கும். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். 12-ந் தேதி வரை எண்ணிய காரியம் இனிதே நிறைவேறும். அதன்பின் வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும்.
குடும்பம்:புதனால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். 6,7-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு.ஆனால் 22,23-ந் தேதிகளில் உறவினாகள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 26,27,28-ந் தேதிகளில் பெண்களால் முன்னேற்றம் காண்பீர்கள். விருந்து விழா என சென்று வருவீர்கள். 18-ந் தேதிக்கு பிறகு செவ்வாயால் அக்கம் பக்கத்தினர்களின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம் தேவை.
உத்தியோகம்: உத்தியோகத்தில் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும் மாத பிற்பகுதியில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். 13,14-ந் தேதிகளில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரம்: சனிபகவான் உங்களுக்கு எண்ணற்ற பல நன்மைகளை செய்து கொண்டு இருக்கிறார். குறிப்பாக முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தடைகள் அனைத்தும் விலகும். இதனால் கூடுதல் வளர்ச்சியை காணலாம். சந்திரனால் 1,,2,24,25-ந் தேதிகளில் சிறு தடைகள் வரலாம். 3,4,5,10,11-ந் தேதிகளில் எதிர்பாராத பணவரவு இருக்கும்.
கலைஞர்கள்: முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் 22-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.. அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.8,9-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறலாம்.
விவசாயம்:அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வருமானத்திற்கு குறையிருக்காது. பாசி பயறு நெல், எள், பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகள் நல்ல மகசூலைத் தரும். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்: மகிழ்ச்சியுன் காணப்படுவர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். உங்களால் குடும்பம் சிறப்படையும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம் வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். மேல் அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். 3,4,5-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.12,13-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம். சகோதரிகளால் நற்சுகம் ஏற்படும்..அவர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். 12-ந் தேதிக்கு பிறகு உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். செவ்வாயால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. 17,18-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும். 14,15,16-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. தூரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம்.மௌனவிரதத்தை கடைபிடிப்பது நல்லது.
அதிர்ஷ்டம்: அதிர்ஷ்ட எண்கள் 4,8 ஆகியவை ஆகும். பச்சை 12-ந் தேதி வரை செந்தூரம் அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும். 3,4,5,10,11,12,13,19,20,21,22,23,26,27,28. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்தியை வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி பால்பாயாசம் வைத்து வணங்கலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். 12-ந் தேதிக்கு பிறகு சூரியனை வணங்குங்கள்.

            கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் பிற்பகுதியில் அதிக பலனை காணலாம். சூரியன் 13-ந் தேதியில் இருந்து நன்மை தரும் இடத்துக்கு வருகிறார். மேலும் சுக்கிரன்,குரு,கேது ஆகியோர் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும்.
உங்கள் முயற்சிகளில் இருந்து வரும் தடைகள் அனைத்தும் 12-ந் தேதிக்கு பிறகு அடியோடு மறையும். காரிய அனுகூலம் கிட்டும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும்.
குடும்பம்: வீட்டுக்கு தேவையான சகல வசதிகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பக்தி உயர்வு மேம்படும். புதிய வீடு-மனை வாகனம் வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. 1,2-ந் தேதிகளில் பெண்கள் உதவிகரமாக இருப்பர். 8,9-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் 24,25-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்
உத்தியோகம்: புதனால் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். 12-ந் தேதிக்கு பிறகு உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சிலர் பதவி உயர்வு கிடைக்க பெறலாம். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தை காணலாம். 22,23-ந் தேதிகள் சிறப்பான காலமாக இருக்கும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வணிகம்: நல்ல லாபம் கிடைக்கும். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். அலைச்சல் இருக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.12-ந் தேதிக்கு எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும்.கேதுவால் ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 3,4,5,26,27,28-ந் தேதிகளில் தடைகள் வரலாம். பொருள் விரையம் உருவாகலாம். 12,13-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் வருவாய் கிட்டும்.
பொதுநலம்: கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சககலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். புகழ் பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள் அரசியல்வாதிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். 10,11-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: சிறப்பான பலனை காணலாம். நற்பெயர் கிடைக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயம்: கொள்ளு,துவரை, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், பாசி பயறு போன்ற தானியங்கள் சிறப்பான மகசூலை தரும். கால் நடைவகையில் நல்ல பலன் கிடைக்கும். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
பெண்கள்:தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். தோழிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். சகோதரர்கள் மிக உறுதுணையாக இருப்பர். 6,7-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 14,15,16-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். பணம் கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
உடல்நலம்: செவ்வாயால் இருந்த உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் 18-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும்.19,20,21-ந் தேதிகளில் வாயு தொடர்பான உபாதை வரலாம். சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.17,18-ந் தேதிகளில் சந்திரன் அஷ்டமத்திற்கு வருகிறார். எனவே அன்று வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 5,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். மஞ்சள், சிவப்பு 12-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் நலம் தரும் நிறங்கள். 1,2,6,7,12,13,14,15,16,22,23,24,25 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். முருகனை தரிசனம் செய்து ஏழைகளுக்கு மொச்சை தானம் செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாள் வழிபாடு நடத்துங்கள். ராகுவுக்கு அர்ச்சனை செய்து உளுந்து தானம் செய்யலாம்.ராகு காலத்தில் துர்க்கை பூஜை செய்யலாம்.12-ந் தேதி வரை தினமும் காலையில் சூரியதரிசனம் செய்யுங்கள்.

                    துலாம்

துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் புதன்,சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். தேவைகள் பூர்த்தி ஆகும். சுக்கிரனால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். 22-ந் தேதிக்கு பிறகு பக்தி உயர்வு மேம்படும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும்
குடும்பம்: புதனால் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும்.3,4,5 ஆகிய தேதிகளில் பெண்களால் உயர்வு கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.10,11-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு.ஆனால் 26,27,28-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். எனவே ஒதுங்கி இருக்கவும்.செவ்வாயால் இருந்து வந்த மனவேதனை 18-ந் தேதிக்கு பிறகு மறையும். கணவன்- மனைவி இடையே அன்னியோன்ய மான சூழ்நிலை இருக்கும்.
உத்தியோகம்: தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும் மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் நடந்து கொள்வர். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 24,25-ந் தேதிகள் அனுகூலமான நாட்களாக இருக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரிகள்: முன்னேற்றம் காண்பர். பொருளாதார வளம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். சூரியனால் பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 12-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். 1,2,6,7-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.14,15,16-ந் தேதிகளில் அதிக லாபம் கிடைக்கும். 22-ந் தேதிக்கு பிறகு கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும்.
கலைஞர்கள்:புதிய ஒப்பந்தங்களை பெறலாம். புகழ் பாராட்டு கிடைக்கும். சிலருக்கு அரசிடம் இருந்து விருது வரலாம். சமூகநல சேவகர்கள் மதிப்பு, மரியாதை கிடைக்கப் பெறுவர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.அரசியல்வாதிகள் சுமாரான பலனையே காண்பர். 12,13-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: சிறப்பான நிலையை காணலாம். புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறை இருக்காது. குறிப்பாக நெல்,பாசிபயறு, சோளம் போன்றவற்றில் சிறப்பான மகசூல் கிடைக்கும்.கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள்: அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 17,18-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும்.சகோதரிகளால் உதவி கிடைக்கும். பணம் கிடைக்கும். 8,9-ந் தேதிகளில் பொன், பொருள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். 22-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தோழிகள் உதவிகரமாக இருப்பர். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு அச்சம் இடர்பாடுகள் விலகும்.
உடல்நலம்: வியாதி தொல்லை இருக்கும்.18-ந் தேதிக்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். 19,20,21-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. மௌனவிரதத்தை கடைபிடிப்பது நல்லது.22,23-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.
அதிர்ஷ்டம்: 4,6 ம் அதிர்ஷ்டம் தரும் நிறங்கள். வெள்ளை, பச்சை அனுகூலம் தரும் நிறங்கள்.3,4,5,8,9,14,15,16,17,18,24,25,26,27,28. ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: ஆஞ்சநேயரை வணங்கி வரவும். தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம்.

                   விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதத்தை பொறுத்த வரை சூரியன்12-ந் தேதி வரையும், செவ்வாய் 18-ந் தேதி வரையும் நற்பலனை கொடுப்பார்கள். மேலும் ,சுக்கிரன்,சனி மாதம் முழுவதும் நன்மையை தருவார்கள். சூரியனால் மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். பொருளாதார வளம் மேம்படும்.
குடும்பம்: சுக்கிரனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.செவ்வாயால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு, வாகனம் வாங்க நினைப்பவர்கள் 18-ந் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ளவும். 1,2-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் 12,13-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். 6,7-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
உத்தியோகம்: போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை18-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். ஆனாலும் புதனால் வேலைப்பளு இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். 26,27,28-ந் தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரிகள்: நல்ல பணப்புழக்கத்துடன் காணப்படுவர். லாபம் சிறப்பா இருக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். போட்டியாளர்களை வெற்றி கொள்வீர்கள். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. 12-ந் தேதிக்கு பிறகு பெண்களால் இடையூறுகள் வரலாம். எனவே இனம் தெரியாத பெண்கள் வகையில் சகவாசம் வேண்டாம். பகைவர்களால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.17,18-ந் தேதிகளில் எதிர்பாராத வருவாய் கிடைக்கும். 3,4,5,8,9-ந் தேதிகளில் பண விரயம் ஆகலாம்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதிக பண வரவு இருக்கும். விருது போன்றவை கிடைக்கும் சமூகநல சேவகர்கள் நல்ல அந்தஸ்தில் இருப்பர். அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் இருப்பர். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.14,15,16-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அசட்டையாக இருந்து விட வேண்டாம் அதிக சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். குருவால் சுறுசுறுப்பு அற்ற நிலை, வீண் அலைச்சல் முதலியன ஏற்படலாம்.
விவசாயிகள் சிறப்பான நிலையை எதிர்நோக்கலாம். பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்.கோழி,ஆடுவளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள்: வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். தோழிகள் அனுசரணையுடன் இருப்பர்.பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 22-ந் தேதிக்கு பிறகு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். 10,11-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும்.19,20,21-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள் சகோதரர்கள் வகையில் உதவி கிடைக்கும். பணம் கிடைக்கும். ராகுவால் .சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.
உடல்நலம்: சிறப்படையும். மருத்துவச் செலவு குறையும்.24,25-ந் தேதிகளில் வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். மனக்குழப்பம் ஏற்படலாம்.22,23-ந் தேதிகளில் வீண்விவாதங்களில் ஈடுபடாமல் தெய்வ வழிபாட்டில் அக்கறை காட்டவும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 5,6 சிறப்பை தரும் எண்கள். வெள்ளை, கறுப்பு 12-ந் தேதி வரை செந்தூரம் அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் ஆகும்.1,2,6,7,10,11,17,18,19,20,21,26,27,28 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். இதனால் அரசு வகையில் இருந்து வரும் பிரச்சினை மறையும். ராகுவை வணங்கினால் உறவினர்கள் வகையில் ஒற்றுமை ஏற்படும். 12-ந் தேதிக்கு பிறகு தினமும் காலையில் சூரியனை வழிபட்டு வாருங்கள்.


தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன், ராகு, குரு சாதகமாக நின்று பல்வேறு நன்மைகளை தருவார்கள். மேலும் 12-ந் தேதிக்கு பிறகு சூரியனும், 18-ந் தேதிக்கு பிறகு செவ்வாயும் நற்பலனை தருவார். துணிச்சல் இருக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். 12-ந் தேதிக்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
குடும்பம்: அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். 25-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சகோதரிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். குறிப்பாக 8,9-ந் தேதிகளில் அவர்களால் மிகுந்த பலனை எதிர்பார்க்கலாம்.3,4,5-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 14,15,16-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் மேன்மை காண்பர். மேல் அதிகாரிகளின்ஆதரவு கிடைக்கும்.அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கை களை 22-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். 1,2-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகளை பெறலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். 12-ந் தேதிக்கு பிறகு நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு விபத்து பயம் அறவே நீங்கும்.
வியாபாரிகள்: கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 13-ந் தேதிக்கு பிறகு அதிக லாபம் கிடைக்க பெறுவர். பொருள் விரயம் மறையும். 6,7,10,11-ந் தேதிகளில் தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். 19,20,21-ந் தேதிகளில் எதிர்பாராதவகையில் பணம் கிடைக்க பெறுவர். சனிபகவானால் பொருட்களை களவு கொடுக்க நேரிடும்.
கலைஞர்கள்: புதிய ஒபப்பந்தம் வரும். புதிய நண்பர்களால் உதவி கிடைக்கும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். சமூகநல சேவகர்கள் சிறப்பு பெறுவர். புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் கெட்ட சகவாசத்தினால் அவதிபட்டவர்கள் அதில் இருந்து 18-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர். அதன்பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்க பெறலாம். 17,18-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படித்தால் சிறப்பு நிலையை அடையலாம். இருப்பினும் குருவால் ஆசிரியர்கள்,ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு இருக்கிறது.
விவசாயிகள்: நெல்,சோளம், மஞ்சள், பாசிபயறு தக்காளி, பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும்.18-ந் தேதிக்கு பிறகு பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்: கணவர் மற்றும் குடும்பத்தரிள் அன்பை பெறுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். உறவினர்கள் வகையில் இருந்து வந்த மனக்கசப்பும் மறையும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். 18-ந் தேதிக்கு பிறகு பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். பதவி உயர்வு காண்பர். 12,13-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 22,23 ஆகிய தேதிகளில் சிறப்பான பலன்களை காணலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் பண வரவு இருக்கும்.
உடல் நலம்: கண் வலி தொடர்பான உபாதைகள் 12-ந் தேதிக்கு பிறகு பூரண குணமாகும். மருத்துவ செலவு குறைம்.18-ந் தேதிக்கு பிறகு பிள்ளைகள் உடல் ஆரோக்கியம் மேம்படும்.24,25-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. தூரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம்.26,27,28-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
அதிர்ஷ்டம்:1,5அதிர்ஷடம் தரும் எண்கள். மஞ்சள்,வெள்ளை, 12-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் யோகம் தரும் நிறங்கள். 1,2,3,4,5,8,9,12,13,19,20,21,22,23.ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: புதன்கிழமை குலதெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு பாசிப்பயறு தானம் செய்யுங்கள்.சனிபகவானை வழிபட்டு காக்கைக்கு அன்னமிடுங்கள். பார்வையற்றவர் களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். 12-ந் தேதி வரை சூரியனை தரிசனம் செய்யுங்கள். முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்யுங்கள்.

                           மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன்,கேது சாதகமாக இருந்து சிறப்பான பலனை தருவார்கள். ஆனால் புதன், சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் தடைகளை சந்திக்க நேரிடலாம். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும்.
குடும்பம்: சுக்கிரனால் பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 22-ந் தேதிக்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். 10,11-ந் தேதிகளில் சகோதரிகளால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். 6,7-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 17,18-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்பு உண்டு. புதனால் வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர்,அலைச்சல், சோர்வு வயிறு தொடர்பான உபாதைகள் முதலியன 12-ந் தேதிக்கு பிறகு இருக்காது. ஆனால் அதன்பிறகு அவரால் வீண்விரயம் ஏற்படும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.
உத்தியோகம்: புதனால் சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். இருப்பினும் சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால் உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும்.சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர். 22-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். வேலைப்பளு குறையும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.இடமாற்ற பீதி மறையும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் கேதுவின் துணையோடு உயர்ந்த நிலையை எட்டிபிடிப்பர். வேலையில் மன மகிழ்ச்சி ஏற்படும்.3,4,5-ந் தேதிகள் எதிலும் வெற்றி காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வணிகம்: தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து 12-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர். கேதுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். வியாபாரத்தை பெருக்கி கொள்ளலாம். உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நன்றி கடனுடன் இருப்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். 22-ந் தேதிக்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.. 8,9,12,13-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.22,23-ந் தேதிகளில் எதிர்பாராத வருவாய் கிடைக்கும்.
பொதுநலம்: கலைஞர்கள் சிறப்பான பலனை பெறலாம் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புகழ் பாராட்டு கிடைக்கும். பொதுநல சேவகர்கள் நல்ல பெயரையும் பொருளாதர வளத்தையும் பெறுவர். 22-ந் தேதிக்கு பிறகு அரசியல்வாதிகள் சிறப்பு அடைவர்.
மாணவர்கள்:ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும். ஆனாலும் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது .
விவசாயம்: உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். நெல், சோளம், கொள்ளு, மஞ்சள், பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும்.பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். நல்ல வருமானத்தை பெறுவர்.வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள்: வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். உங்களால் குடும்பம் சிறப்படையும். கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் நன்மதிப்பு பெறுவர். உத்தியோகம் பார்க்கும் பெண்கள் பதவி உயர்வு காண்பர். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும்.. சுயதொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். 14,15,16-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவிகள்வரப் பெறலாம். 24,25-ந்தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் உதவி கிடைக்கும்.பணம் கிடைக்கும்.
உடல்நலம்: சூரியனால் 12-ந் தேதிக்கு பிறகு கண் வலி வரலாம். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். செவ்வாயால் பயணத்தின் போது சற்று கவனம் தேவை. 18-ந் தேதிக்கு பிறகு பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. 1,2-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். 26,27,28-ந் தேதிகளில் சந்திரன் அஷ்டமத்திற்கு வருகிறார். எனவே அன்று மௌனவிரதத்தை கடைபிடிப்பது நல்லது.
அதிர்ஷ்டம்: 6,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, சிவப்பு, அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும். 3,4,5,6,7,10,11,14,15,16,22,23,24,25. ஆகிய தேதிகள் சிறப்பான நாட்கள்.
வழிபாடு: நவகிரகங்களில் சூரியன், புதனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். கோதுமை, பாசிபயறு தானம் செய்யலாம். புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.

                      கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் செவ்வாய் 18-ந் தேதி வரை நற்பலனை கொடுப்பார்.அதன்பின் அவர் சாதகமற்ற இடத்திகு சென்றாலும் கவலைகொள்ள தேவை இல்லை காரணம் 22-ந் தேதி சுக்கிரன் சாதமான இடத்துக்கு வந்து நற்பலனை கொடுப்பார்.
செவ்வாயால் பக்தி உயர்வு மேம்படும். கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பொருளாதார வளம் மேம்படும். 12-ந் தேதிக்கு பிறகு வீண் செலவுகள் இருக்காது. 22-ந் தேதிக்கு பிறகு பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
குடும்பம்: புதிய வீடு-மனை வாகனம் வாங்க நினைப்பவர்கள் 18-ந் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ளவும். 22-ந் தேதிக்கு பிறகு சுக்கிரனால் பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். புதனால் வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். அக்கம் பக்கத்தினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம்.12,13-ந் தேதிகளில் சகோதரிகளால் முன்னேற்றமான சம்பவம் நடக்கும். 8,9-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மை கிடைக்கும். ஆனால் 19,20,21-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் பிணக்குகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 18-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சீரான நிலையில் காணப்படுவர். சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதிக சிரத்தை எடுத்தால்தான் கோரிக்கைகள் நிறைவேறும். இடமாற்ற பீதி 12-ந் தேதிக்கு பிறகு மறையும்.6,7-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வணிகம்: உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகத்தில் அதிக வருவாயை பெறலாம். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.12-ந் தேதிக்கு பிறகு வாடிக்கை யாளர்களிடம் அனுசரித்து போகவும். எதிரிகளால் தொல்லை வரலாம். 10,11,14,15,16-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.24,25-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். 22-ந் தேதிக்கு பிறகு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிறப்பான வருமானம் இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். சமூகநல சேவகர்கள் நற்புகழை பெறுவர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். 22,23-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்- அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.
விவசாயிகள்:பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. பாசி பயறு, நெல், உளுந்து, சோளம் நல்ல வருவாயை கொடுக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பக்கத்து நிலகாரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
பெண்கள்:சிறப்பான பலனை காணலாம். குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். .வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சுக்கிரனால் லாபத்துக்கு குறை இருக்காது.பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.26,27,28-ந் தேதிகளில் சிறப்பான நாட்களாக இருக்கும். விருந்து, விழாவுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 17,18-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் கிடைக்கப் பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 18-ந் தேதிக்கு பிறகு சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம் தேவை.
உடல்நலம்: பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் 12-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். வயிறு பிரச்சினைவரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. 1,2-ந் தேதிகளில் சந்திரன் அஷ்டமத்திற்கு வருகிறார். எனவே அன்று வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பண விஷயத்தில் கவனம் தேவை.3,4,5-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.
அதிர்ஷ்டம்:2,4 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். சிவப்பு,வெள்ளை ஆகியவை அதிர்ஷ்ட நிறங்களாகும்.6,7,8,9,12,13,17,18,24,25,26,27,28 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்கள்.
வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.அப்போது கொண்டை கடலை படைத்து தானம் செய்யவும். தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.ஆஞ்சநேயரை வணங்கி வரவும்.சனிக்கிழமை பெருமாள் வழிபாடு நடத்துங்கள்.

                  மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த மாதம்சூரியன்12-ந் தேதி வரையிலும், சுக்கிரன்22-ந் தேதி வரையிலும்,செவ்வாய் 18-ந் தேதிக்கு பிறகும் நன்மைகளை தருவார்கள். மேலும் புதன், சனி, ராகு, குருவின் நற்பலன்கள் தொடரும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எடுத்த காரியம் இனிதே நிறைவேறும்..பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். 12-ந் தேதிக்கு பிறகு வீண் செலவு ஏற்படலாம். சிக்கனம் தேவை.
குடும்பம்: பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். குருவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும்.18-ந் தேதிக்கு பிறகு பக்தி உயர்வு மேம்படும். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். குறிப்பாக 14,15,16-ந் தேதிகளில் அவர்களால் அதிக நன்மை கிடைக்கும். சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். 10,11-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 22,23-ந் தேதிகளில் உற்றார் உறவினர் வகையில் வீண் பிணக்குகள் வர வாய்ப்பு உண்டு.
உத்தியோகம்: சிறப்பான முன்னேற்றம் இருக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும்.அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். 13-ந் தேதிக்கு பிறகு சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம். அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும்.18-ந் தேதிக்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். அதிகாரிகளின் ஆதரவும் அனுசணையும் வந்து சேரும். .6,7-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரம்: தொழிலில் லாபம் அதிகரிக்கும்.உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 12-ந் தேதிக்கு பிறகு எதிரிகளின் இடையூறு லரலாம். 18-ந் தேதிக்கு பிறகு ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 12,13,17,19-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம். 26,27,28-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
கலைஞர்கள்: முன்னேற்றமான நிகழ்வுகள் நடக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். , பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காணலாம். அரசியல்வாதிகள் 18-ந் தேதிக்கு பிறகு வாழ்க்கையில் வசந்தம் பிறக்கும் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். 24,25-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: புதன்,குருவால் அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். போட்டிகளில் வெற்றி காணலாம்.ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். காலர்ஷிப் போன்றவை .கிடைக்கும்.தேர்வுகள் சிறப்பாக எழுதுவீர்கள்.
விவசாயம்: நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. பாசி பயறு நெல்,உளுந்து, சோளம், துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.18-ந் தேதிக்கு பிறகுகோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும்.
பெண்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். 1,2 ஆகிய தேதிகள் குதூகலமான நாட்களாக அமையும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். 19,20,21-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.18-ந் தேதிக்கு பிறகு பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பெண்காவலர்கள் பதவி உயர்வு காண்பர்.
உடல்நலம்: 13-ந் தேதிக்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. 3,4,5-ந் தேதிகளில் சந்திரன் அஷ்டமத்திற்கு வருகிறார். எனவே அன்று வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.பண விஷயத்தில் கவனம் தேவை.6,7-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.
அதிர்ஷ்டம்: 3,5,9 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். பச்சை,மஞ்சள்,12-ந் தேதி வரை செந்தூரம் அதிர்ஷ்ட நிறங்களாகும். 1,2,8,9,10,11,14,15,16,19,20,21, 26,27,28 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்.
வழிபாடு: முருகன் கோவிலுக்கும் சென்று வாருங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யலாம்.12-ந் தேதிக்கு பிறகு தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு கோதுமை தானம் கொடுக்கலாம்.22-ந் தேதிக்கு பிறகு வெள்ளிக் கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி பால்பாயாசம் வைத்து வணங்கலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.