May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500க்கு கீழே வந்தது; சென்னையில் கொரோனா இறப்பு இல்லை

1 min read

Corona impact in Tamil Nadu came below 500; There is no corona death in Chennai

4/2/2021

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று 500 கீழே வந்தது. இன்று 494 பேருக்குத்தான் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று கொரோனாவுக்கு யாரும் இறக்கவில்லை.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று (வியாழக்கிழமை)) 36 வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. இன்று 500க்கு கிழே கொரோனா பாதிப்பு வந்துள்ளது. இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) 494 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,40,360 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 254 ஆய்வகங்கள் மூலம் 51,882 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 301 பேர் ஆண்கள், 193 பேர் பெண்கள். இதுவரை கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 5,07,889. மொத்த பெண்களின் எண்ணிக்கை 3,32,437. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 517 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்தஎண்ணிக்கை 8 லட்சத்து 23 ஆயிரத்து 518 ஆக உள்ளது.

4 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 4 பேர் இறந்தனர். இதில் 3 பேர் அரசு ஆஸ்பத்திரிகிளலும், ஒருவர் தனியார் ஆஸ்பத்தரியிலும அனமதிக்கப்பட்டு இருந்தவர்கள் ஆவர். இன்று இறந்தவர்கள் காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கோவை, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இன்று சென்னையில் கொரோனாவுக்கு யாரும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,375 ஆக உயர்த்துள்ளது. தற்போது 4,467 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி

இன்று கொரோனா தாக்கியவர்களில் சென்னையில் மட்டும் 147 பேர். கோவையில் 58 பேரும், திருநெல்வேலியில் ஒருவரும், தென்காசியில் 4 பேரும், துத்துக்குடியில் ஒருவரும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.