May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 12,143 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 12,143 people in one day in India

13.2.2021

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12,143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

இந்தியாவில் கொரோனா பற்றிய விவரங்களை இன்று (சனிக்கிழமை) காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. அவை வருமாறு:&
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 12,143 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,92,746 உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,55,550 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 11,395 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,00,625 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,36,571 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியா முழுவதும் நேற்று வரை 79,67,647 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.