தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா
1 min readCorona for 477 people in Tamil Nadu today
13.2.2021
தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று (சனிக்கிழமை) 45 வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) 477 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,44,650 ஆக அதிகரித்து உள்ளது. இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 295 பேர் ஆண்கள். 182 பேர் பெண்கள். இதுவரை கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,10,457. பெண்களின் மொத்த எண்ணிக்கை 3,34,158. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 35 ஆகவும் உள்ளது.
இன்று மட்டும் 482 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 27 ஆயிரத்து 962 ஆக உள்ளது.
5 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்தனர்.சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அதில் 2 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 3 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்ட்வர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12,413 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,275 பேர் கொரோனாக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் .
தமிழகத்தில் உள்ள 254 ஆய்வகங்களில் இன்று மட்டும் 54,034 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
தென்காசி
இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நெல்லையில் 7 பேருக்கும், தென்காசியில் 6 பேருக்கும், தூத்துக்குடியில் 3 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.