May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 448 பேருக்கு புதிதாக கொரோனா- 7 பேர் பலி

1 min read

In Tamil Nadu today, 448 new coronas – 7 killed

19.2.2021

தமிழகத்தில் இன்று புதிதாக 448 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 7 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய தகவல்களை மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதன் விவரம் வருமாறு:&
தமிழகத்தில் இன்று( வெள்ளிக்கிழமை) 448 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 47 ஆயிரத்து 385 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 467 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரத்து 787 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். அதாவது சென்னையில் 3 பேரும், திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 4,147 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்டம் வாரியாக…

இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வருமாறு:&-

அரியலூர் – 3
செங்கல்பட்டு – 46
சென்னை – 136
கோவை – 49
கடலூர் – 7
தர்மபுரி – 3
திண்டுக்கல் – 3
ஈரோடு – 17
கள்ளக்குறிச்சி – 0
காஞ்சிபுரம் – 16
கன்னியாகுமரி – 10
கரூர் – 3
கிருஷ்ணகிரி – 2
மதுரை – 6
நாகை – 3
நாமக்கல் – 4
நீலகிரி – 11
பெரம்பலூர் – 0
புதுக்கோட்டை – 1
ராமநாதபுரம் – 3
ராணிப்பேட்டை – 1
சேலம் – 12
சிவகங்கை – 1
தென்காசி – 3
தஞ்சாவூர் – 12
தேனி – 2
திருப்பத்தூர் – 1
திருவள்ளூர் – 31
திருவண்ணாமலை – 5
திருவாரூர் – 10
தூத்துக்குடி – 2
திருநெல்வேலி – 5
திருப்பூர் – 16
திருச்சி – 11
வேலூர் – 7
விழுப்புரம் – 3
விருதுநகர் – 3

மொத்தம் – 448

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.