திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை
1 min readNegotiations on block allocation between DMK-Congress
2.3.2021
திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது.
கூட்டணி பேச்சு வார்த்தை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ந் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இறுதி செய்யும் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 24 தொகுதிகள் வரை காங்கிரசு-க்கு ஒதுக்க திமுக முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ. ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகவில்லை.