May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 489 people in Tamil Nadu today

3.3.2021

தமிழகத்தில் இன்று புதிதாக 489 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றி இன்று தமிழக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று(வியாழக்கிழமை) புதிதாக 489 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,52,967 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 2 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,504 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 494 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,36,473 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 3,990 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,36,072 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கண்ட தகவல்கள் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.