அரசியல், அதிகாரம் பற்றி சசிகலா பரபரப்பு அறிக்கை
1 min readSasikala’s sensational statement about politics and power
3.3.2021
பதவி, அரசியல் அதிகாரம் பற்றி சசிகலா பரபரப்பாக அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆசைப்படவில்லை
நான் என்றும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு சசிகலா அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.