May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

1 min read

Judges give a different verdict in the embezzlement case against Minister Rajendra Balaji

4.3.2021

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க 3வது நீதிபதியை நியமிக்கும் வகையில் ஆவணங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தது.
இந்த நிலையில், இன்று நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள்.
விசாரணை நடத்திய ஒரு நீதிபதி சத்தியநாராயணா தனது உத்தரவில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி கூறினார்.
ஆனால் இன்னொரு நீதிபதியான ஹேமலதா இதில் “வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதால் பயன் இல்லை, எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இவ்வாறு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3-வது நீதிபதி விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.