May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி மரணம்

1 min read

Former Union Minister killed in Corona attack

17.3.2021

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

முன்னாள் மத்திய மந்திரி

மராட்டிய மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர்களில் திலீப் காந்தியும் ஒருவர். இவர் பாஜக சார்பில் போட்டியிட்டு 1999ம் ஆண்டு அகமத்நகர் மக்களவை தொகுதி உறுப்பினராக வெற்றிபெற்றார். 2003 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கப்பல் துறையில் இவர் மத்திய மந்திரியாக செயல்பட்டார்.
அதன் பின் 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் இதே தொகுதியில் இருந்து வெற்றிபெற்றார். மீண்டும் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் அவர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால், 2019 மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மரணம்

இந்த நிலையில், முன்னாள் மத்திய மந்திரி திலீப் காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.