மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா அதிகரிப்பு
1 min readCorona increase at an unprecedented rate in Maharashdra
21.3.2021
மராட்டியத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.
மராட்டியம்
மராட்டியத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,535- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 99- பேர் உயிரிழந்தனர். மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 79 ஆயிரத்து 682- ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53 ஆயிரத்து 399- ஆக உயர்ந்துள்ளது.
மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் 3,799 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இன்று கொரோனா பாதிப்பால் 10 பேர் உயிரிழந்தனர். மும்பையில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 675- ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.
பஞ்சாய்
பஞ்சாப் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,669- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 110- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 1331- பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 529- ஆகும். கொரோனாவால் இன்று ஒரே நளில் 44 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 324- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 527- ஆக உள்ளது.
கர்நாடகம்
கர்நாடகாவில் இன்று 1,715- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 1,048- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 493- ஆக உள்ளது.
சபாநாயகருக்கு கொரோனா
புதுடில்லி: லோக்சபா சபாநாயகருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக டில்லி எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடந்த 19ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 20ம் தேதி, எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.