May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா அதிகரிப்பு

1 min read

Corona increase at an unprecedented rate in Maharashdra

21.3.2021

மராட்டியத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மராட்டியம்

மராட்டியத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,535- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 99- பேர் உயிரிழந்தனர். மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 லட்சத்து 79 ஆயிரத்து 682- ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53 ஆயிரத்து 399- ஆக உயர்ந்துள்ளது.

மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் 3,799 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இன்று கொரோனா பாதிப்பால் 10 பேர் உயிரிழந்தனர். மும்பையில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 675- ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.

பஞ்சாய்

பஞ்சாப் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,669- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 110- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 1331- பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 529- ஆகும். கொரோனாவால் இன்று ஒரே நளில் 44 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 324- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 527- ஆக உள்ளது.

கர்நாடகம்

கர்நாடகாவில் இன்று 1,715- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 1,048- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 493- ஆக உள்ளது.

சபாநாயகருக்கு கொரோனா

புதுடில்லி: லோக்சபா சபாநாயகருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக டில்லி எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடந்த 19ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 20ம் தேதி, எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.