தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,779 பேருக்கு கொரோனா
1 min readCorona for 1,779 people in a single day in Tamil Nadu today
25.3.2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,779 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தமிழக கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதார துறை இன்று மாலை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:—-&
தமிழகத்தில் இன்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் 1,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,73,219 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா தாக்கியவர்களில் இன்று 10,487 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்து 91 ஆக உயர்வடைந்து உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 11 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,641 ஆக உள்ளது.
வேட்பாளருக்கு கொரோனா
விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜூக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் ஒரு தேமுதிக வேட்பாளருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.