தமிழக மீனவர்கள் 54 பேரை இலங்கை சிறைபிடிப்பு
1 min readSri Lankan captures 54 Tamil fishermen
25.3.2021
எல்லை கடந்து மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 54 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. மேலும் 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்கள் கடலில் நிம்மதியாக மீன் பிடிக்க முடியவில்லை. அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது வருகிறது.
கடந்த காலங்களில் பல மீனவர்கள் தாக்குதலுக்கும் உள்ளானார்கள். இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூடுக்கு பலியாகவும் செய்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபொழுது, எல்லை கடந்து மீன் பிடித்தனர் என கூறி இந்திய மீனவர்கள் 54 பேரை சிறை பிடித்து சென்றுள்ளனர். அவர்களில் 40 பேர் தமிழக மீனவர்கள். 14 பேர் காரைக்கால் (புதுவை மாநிலம்) மீனவர்கள் ஆவர். மீனவர்களிடம் இருந்து 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து சென்றுள்ளனர்.