May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 3,32,730 பேருக்கு கொரோனா; 2,263 பேர் சாவு

1 min read

Corona for 3,32,730 people in a single day in India; 2,263 deaths

23.4.2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,263 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது.
இன்று காலை இந்தியாவில் கொரோ நிலவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இன்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நளரில் இந்தியாவில் புதிய உச்சமாக 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாடு முழுகூதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 279 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.

சாவு

இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனா தாக்குதலுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 263 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 54 லட்சத்து 78 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.