இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா
1 min readCorona for 3 lakh 46 thousand 786 people in a single day in India
24.4.2021
இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக வெகுவாக குறைந்தது. ஆனால் கடந்த மாத பிற்பகுதியில் இருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பில் தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. அதாவது 3 லட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து நாட்டில் இதுவரை நாட்டில் 1 கோடியே 66 லட்சத்து 10 ஆயிரத்து 481 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நேற்று மட்டும் ஒரே நாளில் 2,264 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 89 ஆயிரத்து 544- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 838 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சாரஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 38 லட்சத்து 67 ஆயிரத்து 997- ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 52 ஆயிரத்து 940- ஆக உள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.