உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்சி 8பேர்சாவு; 384 பேர் மீட்பு
1 min readUttarakhand avalanche kills 8; 384 people rescued
24.4.2021
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் 8 பேர் இறந்தனர். 384 பேர் மீட்கப்பட்டனர்.
பனிசரிவு
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையை தொடர்ந்து பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், சிக்கிக் கொண்டனர்.
தகவல் கிடைந்ததும் சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
8 பேர் சாவு
இதில் 384 பேர் உயிரோடு மீட்கப்பட்டனர். ஆனால் 8 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்களில் 6 பேரில் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.