வராக ஜெயந்தி
1 min readVaraga Jayanthi
1/4/2021
இரணியனின் தம்பியான இரண்யாட்சன் பூமியை தண்ணீருக்குள் மூழ்கடித்து விட்டான். பூமியை மீட்க மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்தார். அவர் இரணியாட்சனை கொண்டு பூமியை மீட்டு எடுத்தார். இந்த நாள் சித்திரை மாதம் 18&ந் தேதி (1-5-2021) சனிக்கிழமை பஞ்சமி திதி அன்று வருகிறது. அன்றைய தினம் பெருமாளை வழிபட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் வராக பெருமாள் தனிக்கோவில் கொண்டுள்ளார். திருவிடவெந்தையிலும் அவர் தனிக் கோவிலில் அருள்பாலிக்கிறார். கேட்டை, மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று வராகபெருமானை வணங்குவது சிறப்பு.