June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

நல்லெண்ணை குளியலும் லட்சுமி அருளும்

1 min read

Bathing in good oil and the blessings of Goddess Lakshmi

17.10.2025
தீபாவளி என்றாலே எண்ணெய் தேய்த்து குளிப்பது பிரதானம். இதனை கங்கா ஸ்நானம் என்று சொல்கிறோம். அன்றைய தினம் நல்லெண்ணெய் தேய்ந்து குளித்தால் கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். இதன் மூலம் லட்சுமி அருளை பெறலாம்.
அன்றைய தினம் எள்ளில் இருந்து எடுக்கும் நல்லெண்ணெயில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். அதற்கான புராண வரலாறை காணலாம்.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி மேரு மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை கயிறாவும் கொண்டு பாற்கடலை கடைந்து கொண்டிருந்தார்கள். அப்போது மத்து (மலை) கடலில் பதிந்து விட்டது. இதனால் தொடர்ந்து பாற்கடலை கடைய முடியாமல் தேவர்களும், அசுரர்களும் திணறினார்கள். அவர்கள் மகாவிஷ்ணுவை வேண்டினார்கள். அதனால் மகாலிஷ்ணு ஆமையாக(கூர்ம அவதாரம்) வந்து கடலுக்குள் சென்று மத்தை தாங்கினார். அதன்பின் அமிர்தம் கிடைத்தது.
ஆமையாக மகாவிஷ்ணு கடலுக்குள் சென்றது மகாலட்சுமிக்கு தெரியாது. கணவரை தேடினாள். பின்னர் ஆமையாக கடலுக்குள் இருப்பதை அறிந்து அங்கு சென்றாள். மகாவிஷ்ணு ஓடி ஒளிந்து விளையாட்டு காட்டினார். கணவரை தேடி மகாலட்சுமி திலம் என்று சொல்லக்கூடிய எள் காட்டுக்குள் ஓடினாள். அப்போது லட்சுமியின் கால்பட்டு எள் அனைத்தும் எண்ணெயாக கசிந்தது. லட்சுமியின் பாதம்பட்டதால் நல்லெண்ணை புனிதமானது.
இறுதியில் மகாவிஷ்ணுவை லட்சமி கண்டுபிடித்துவிட்டாள். லட்சுமியின் கால்பட்டு எள் எண்ணெயான நாள்தான் தீபாவளி. அப்போது எள் செடிக்கு லட்சுமி ஒரு வரம் அளித்தாள். அதாவது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *