திகார் ஜெயிலில் முன்னாள் எம்.பி. கொரோனாவுக்கு பலி; சாவு 5 ஆக உயர்வு
1 min readFormer MP in Tihar Jail Kills corona; Death toll rises to 5
1.5.2021
கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகாரைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., முகமது ஷஹாபுதீன் கொரோனா தொற்றால் இறந்தார்.
முன்னாள் எம்.பி.
பீகார் மாநில, ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்.ஜே.டி.,) கட்சியின் முன்னாள் எம்.பி., முகமது ஷஹாபுதீன்.
இவர் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.
இவருக்கு கடந்த ஏப்ரல் 20-ந் தேதி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக திகார் சிறைத் துறை அதிகாரி சந்தீப் கோயல் தெரிவித்தார்.
சாவு
இதையடுத்து முகமது ஷஹாபுதீன், டெல்லியில் உள்ள டி.டி.யு. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஷஹாபுதீன் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவரை எல்.என்.ஜே.பி., மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் இன்று காலை தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி நிலவரப்படி, திகார் சிறையில் 227 சிறை கைதிகளுக்கும், சிறை ஊழியர்களில் 60 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததாகவும் அதில் 4 கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், திகார் சிறை துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது முன்னாள் எம்.பி.யையும் சேர்த்து திகார் சிறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு.