May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min read

One more week of unrest in Tamil Nadu; MK Stalin’s announcement

23-5-2021

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கானது வரும் 24-ந்தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இதில், தமிழகத்தில் அடுத்த ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.