May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் தினசரி கொரோனா 26,513 ஆக குறைந்தது; 490 பேர் பலி

1 min read

The daily corona in Tamil Nadu has dropped to 26,513; 490 killed

1/5/2021
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 26,513 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 490 பேர் பலியாகி உள்ளனர்.

குறைந்து வரும் கொரோனா

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது முழு ஊரடங்கு அறிவித்தபின்னர் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று கொரோன பதிவு 27,936 ஆக இருந்தது. ஆனால் இன்ற 26,513 என நிலையில் குறைந்தது. ஆனால் இறப்பு எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. மாறாக அதிகரித்து வருகிறது.

தமிழக கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26,513 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்தஎண்ணிக்கை 21,23,029ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 3,332, சென்னையில் 2,467 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

490 பேர் பலி

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 490 பேர் இன்று பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 24,722 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 31,673 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 18,02,176 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 2,96,131 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் சாவு எண்ணிக்கை குறையவில்லை. நேற்று முன்தினம் 478 பேர் இறந்த நிலையில் நேற்று சாவு எண்ணிக்கை 490 ஆக அதிகரித்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.