இந்தியாவில் ஒரு நாள் கொரோனா 50,848 ஆக உயர்வு; 1,358 பேர் சாவு
1 min readOne day in India the corona rises to 50,848; 1,358 deaths
23/6/2021
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பதிவு 50,848 பேராக இருந்தது. இது முந்தைய நாள் பதிவைவிட சற்று உயர்வு ஆகும்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. நேற்று காலையில் 42,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றைய பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையை இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,00,28,709 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 2.67 சதவீதமாக உள்ளது.
1,358 பேர் சாவு
நாடு முழுவதும் ஒரே நாளில் 1,358 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,90,660 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 68,817 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,89,94,855 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 96.56 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,43,194 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.