புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமையால் கல்லூரி மாணவி சாவு; வாலிபர் கைது
1 min readCollege student dies of sexual assault in Pondicherry; Valipar arrested
24.6.2021
புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை காரணமாக கல்லூரி மாணவி இறந்தார். அந்த மாணவியின் தாயாருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள்.
கல்லூரி மாணவி
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவரது கணவர் இறந்துவிட்டார். பரமேஸ்வரி தனது மகள் திவ்யாவுடன் வசித்துவந்தார்.
திவ்யாவுக்கு வயது 17. கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் பாலியல்பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியை படம் எடுத்து மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதனால் மாணவி திவ்யா மனக்குழப்பத்தில் இருந்தார். இதுபற்றி தனது தயாரிடம் சொல்லமாமல் மறைத்து வந்தார். இதனால் திவ்யாவை கேரளாவி்ல் உள்ள தன் தங்கையுடன் அனுப்பி வைத்தார். அங்கே திவ்வா ஆஸ்பத்திரியில் அனுமதி்கப்பட்டார். அங்கு டாக்டர்களிடம் நடந்த விவரத்தை கூறினார்.
இதற்கிடையே மாணவி திவ்யா உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்காக சிகி்ச்சை அளித்தும் பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
அவர் சாகும்முன் அங்குள்ள மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தார்.
இதனை அடுத்து கேரள போலீசார் புதுச்சேரி வந்து அருண்குமாரை கைது செய்து அழைத்துச் சென்றார். அவரிடம் விசாரணை நடக்கிறது.
இதற்கிடையே மாணவி திவ்வாவின் தாயார் பரமேஸ்வரிக்கு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் மாதர் சங்கத்திடம் புகார் கூறினார். பின்னர் நிருபர்களிடம் விளக்கி கூறினார்.
இந்த நியைில் மாணவி திவ்யா இறந்த விவகாரத்தில் குற்றவாளி அருண்குமாருக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் தாய்க்குக் கொலை மிரட்டல் இருப்பதால் அக்குடும்பத்திற்கு, காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மறைமலை அடிகள் சாலையிலுள்ள முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.