இந்தியாவில் மேலும் 39,361 பேருக்கு கொரோனா; 416 பேர் பலி
1 min readCorona for a further 39,361 in India; 416 killed
26.7.2021
இந்தியாவில் மேலும் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 39,361 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 35,968 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 05 லட்சத்து 79 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 4.11 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று கொரோனாவுக்கு 416 பேர் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரேனாவுக்கு இறந்தவர்களின் மொத்தம எண்ணிக்கை 4,20,967 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.35 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.34 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.31 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தடுப்பூசி
இந்தியாவில் இன்று (ஜூலை 26) காலை 8 மணி நிலவரப்படி 43.51 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 20,45,137 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உலக அளவில்…
உலக அளவில் இன்று (ஜூலை 26-ம் தேதி) காலை 10 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 19 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 லட்சத்து 75 ஆயிரத்து 129 பேர் பலியாகினர். 17 கோடியே 67 லட்சத்து 79 ஆயிரத்து 229 பேர் மீண்டனர்.