தமிழ் வழியில் படித்தோருக்கான குரூப்-1 தேர்வில் இட ஒதுக்கீடு; சான்றிதழ் பதிவேற்றலாம்
1 min readReservation in Group-1 examination for Tamil way students; Certificate can be uploaded
31.7.2021
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி தெரிவித்து இருப்பதாவது:-
கடந்த ஜனவரி3 ம் தேதி தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 1 பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களில் தமிழ் வழியில் பயின்றதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வருகிற 5-ந் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ள அதற்கான படிவத்தில், 16 ம் தேதி முதல் செப்டம்பர் 16 ம் தேதி வரையில் ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் ‛டிவி’ நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்:
- பள்ளி முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிப்பு சான்றிதழ்.
- மேல்நிலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு அல்லது பட்டயப்படிப்பு சான்றிதழ்.
- பட்டப் படிப்பு சான்றிதழ்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றதாகக் குறிப்பிட்டு முதல் நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும். இவைதவிர தேர்வாணையத்தின் இணையதளம் மூலமாகவும் இதுகுறித்த தகவல்களை 5 ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.