‘2 மாடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு லிப்ட் கட்டாயம்’
1 min read‘Lift is mandatory for buildings above 2 storeys’
1.9.2021
‛‛இனிமேல் 2 மாடிகளுக்கு மேல் புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில் கட்டாயம் லிப்ட் வசதி இருக்க வேண்டும்,” என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
லிப்ட்
தமிழக சட்டசபையில் இன்று வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சி கொள்கை விளக்கக் குறிப்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மாற்றுத் திறனாளிகள் வசதிக்கான, லிப்ட் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இனிமேல் 2 மாடிகளுக்கு மேல் புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில் கட்டாயம் லிப்ட் வசதி இருக்க வேண்டும். 2 அடுக்குகளுக்கு மேலான கட்டடங்களில் சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை உள்ளிட்ட வசதிகளையும் செய்ய வேண்டும். மேலும், பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்துமிடம் ஆகியவை கட்டப்பட வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை ,தேனி, தென்காசி, திண்டுக்கல், சேலம் , நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் 6,000 குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி நிதி உடன் இந்த 6,000 குடியிருப்புகள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.