தமிழகத்தில் இன்று 1,653 பேருக்கு கொரோனா; 22 பேர் சாவு
1 min readCorona for 1,653 people in Tamil Nadu today; 22 deaths
18.9.2021
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,669 -ல் இருந்து 1,653 ஆக சற்று குறைந்துள்ளது. 22 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,581 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் 1,56,175 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,653 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,43,683 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 938பேர் ஆண்கள், 715 பேர் பெண்கள். தமிழகத்தில் 1,581 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,91,480 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 22 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,310ஆக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 196 ஆக இருந்த நிலையில் இன்று (18ம் தேதி) 204 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 201 பேருக்கும், ஈரோட்டில் 139 பேருக்கும், செங்கல்பட்டில் 101 பேருக்கும், திருப்பூரில் 94 பேருக்கும், தஞ்சையில் 91 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 22 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், தூத்துக்குடியில்13 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.