இந்தியாவில் ஒரே நாளில் 31,382 பேருக்கு கொரோனா; 318 பேர் சாவு
1 min readCorona for 31,382 people in a single day in India; 318 deaths
24.9.2021
இந்தியாவில் ஒரே நாளில் 31,382 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 318 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சற்று ஏறி சற்று இறங்கி வருகிறது. இந்திய சுகாதாரத்துறை அளித்த தகவலின் படி கொரோனா நிலவரம் வருமாறு:-
இந்திய அளவில் கடந்த புதன்கிழமை 26,964 பேருக்கும் நேற்று 31,923 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று காலை வரையிலா கடந்த 24 மணி நேரத்தில் 31,382 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்தியாவில் ஒரே நாளில் 32,542 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,00,162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,28,48,273 ஆக உயர்ந்துள்ளது.
318 பேர் சாவு
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 318 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,46,050 லிருந்து 4,46,368 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.78 சதவீதமாகவும் உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 72,20,642 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 84.15 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,36,99,126 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.