தமிழகத்தில் இன்று 1,657 பேருக்கு கொரோனா; 19 பேர் சாவு
1 min readCorona for 1,657 people in Tamil Nadu today; 19 deaths
27.9.2021
தமிழகத்தில் இன்று கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,694 -ல் இருந்து 1,657 ஆக சற்று குறைந்துள்ளது. 19 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,662 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழக கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,51,880 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,657பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,58,923 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 965 பேர் ஆண்கள், 692 பேர் பெண்கள்.
இன்று தமிழகத்தில் 1,662 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,06,153 ஆக உயர்ந்துள்ளது.
19 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 19 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,509 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக இருந்த நிலையில் இன்று 186 ஆக குறைந்துள்ளது.
கோவையில் இன்று 189 பேருக்கும், ஈரோட்டில் 117 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும், தஞ்சையில் 96 பேருக்கும், திருப்பூரில் 84 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
நெல்லையில் இன்று 20 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 16 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.