May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெயலலிதாவை போல மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்- செல்லூர் ராஜூ புகழாரம்

1 min read

MK Stalin acts like Jayalalithaa in suppressing rowdies- Cellur Raju praises

29.9.2021

ரவுடிகளை ஒடுக்குவதில் ஜெயலலிதாவை போல முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுவது வரவேற்கத்தக்கது என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜு

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளது. அதை விரைவில் சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை தண்ணீர், குடிநீரில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவுடிகள்

கடந்த ஆட்சி காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. ஆனால், டெண்டர்களை தற்போது ரத்து செய்துவிட்டனர். அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதே போல தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.