தமிழகத்தில் இன்று 1,112 பேருக்கு கொரோனா; 14 பேர் சாவு
1 min read
Corona for 1,112 people in Tamil Nadu today; 14 dead
26.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,127ல் இருந்து 1,112 ஆக சற்று குறைந்துள்ளது. 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,341 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,22,700 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,96,328 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,04,23,638 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 632 பேர் ஆண்கள், 480 பேர் பெண்கள். இன்று 1,341 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,47,504 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 14 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,033 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக இருந்த நிலையில் இன்று 144 ஆக குறைந்துள்ளது.
கோவையி்ல் இன்று 30 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும், ஈரோட்டில் 69 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 6 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 11 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.