May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

1-ந் தேதி முதல் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளில் முன்பதிவின்றி பயணிக்கலாம்

1 min read

You can travel without reservation in unreserved train compartments from 1st

25.10.2021
வருகிற 1-ந் தேதி முதல் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளில் ன்பதிவின்றி பயணிக்கலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளார்.

முன்பதிவு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரெயில்களில் பயணிக்க முன்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் முன்பதிவில்லா 2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணிக்கவும் முன்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. இதனால், அவசர வேலையாக ரெயிலில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் சற்று சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், நவம்பர் 1-ம் தேதி முதல் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 23 ரெயில்களில் முன்பதிவில்லா 2-ம் வகுப்பு ரெயில் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
முன்பதிவில்லா ரெயில்பெட்டிகளில் பழைய முறைப்படி முன்பதிவின்றி பயணிக்கலாம். பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

மகிழ்ச்சி

கோவை – நாகர்கோவில் , திருச்சி – திருவனந்தபுரம் இடையேயான ரெயில்களிலும் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வேயின் இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.