தமிழகத்தில் இன்று 1,090 பேருக்கு கொரோனா;15 பேர் சாவு
1 min read
Corona for 1,090 people in Tamil Nadu today; 15 deaths
26.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,112ல் இருந்து 1,090 ஆக சற்று குறைந்துள்ளது. 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,326 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,20,376 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 1,089 பேரும் வெளிநாட்டவர் ஒருவர் என1,090 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,97,418 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 633 பேர் ஆண்கள், 457 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 1,326 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை உள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,48,830 ஆக உயர்ந்துள்ளது.
15 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 15 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,048 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 144ஆக இருந்த நிலையில் இன்று 141ஆக குறைந்துள்ளது.
கோவையில் 128 பேருக்கும், செங்கல்பட்டில் 93 பேருக்கும், ஈரோடில் 67 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 14 பேருக்கும், தென்காசியில் 6 பேருக்கும், தூத்துக்குடியில் 10 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறிப்பட்டது.