இந்தியாவில் புதிதாக 13,166 பேருக்கு கொரோனா; 302 பேர் சாவு
1 min readCorona for 13,166 newcomers in India; 302 deaths
25/2/2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. ஒரே நாளில் 13,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 302 பேர் இறந்துள்ளனர்.
குறைந்து வரும் கொரோனா
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 14,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1 லட்சத்து 34ஆயிரத்து 235 பேர் சிகிச்சையில் உள்ளனர்
நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து 26 ஆயிரத்து 988 பேர் குணம் அடைந்துள்ளனர் .கொரோனாவால் , கடந்த 24 மணி நேரத்தில் 302 பேர் உயிரிழந்துள்ளனர் .