May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

உக்ரைனில் தவிக்கும் ருமேனியா வழியாக இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு முயற்சி

1 min read

Federal government seeks to rescue Indian students via Romania stranded in Ukraine

25.2.2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் அங்கு தவிக்கும் இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

போர்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் அச்சத்தில் உள்ளனர் .

உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.. அவர்களை அழைத்துவர நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம், உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால், டெல்லிக்கு திரும்பி வந்து விட்டது.

ருமேனியா வழியாக..

இந்நிலையில் உக்காரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை ருமேனியா வழியாக மீட்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது .

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 2ஏர் இந்தியா விமானங்களை இயக்கப்பட உள்ளதாகவும், ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட் வழியாக இந்தியர்களை மீட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.