தமிழகத்தில் இன்று 1,484 பேருக்கு கொரோனா
1 min readCorona for 1,484 people in Tamil Nadu today
28.6.2022
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூன் 28ம் தேதி) ஒரே நாளில் 1,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்திலர் இன்று (ஜூன் 28) 22,382 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 632; செங்கல்பட்டு 239; திருவள்ளூர் 79, கோவை 70; காஞ்சிபுரம் 59; கன்னியாகுமரி 51 ;திருச்சி 42 ; திருநெல்வேலி 32; தூத்துக்குடி,சேலம், விருதுநகர் 20; மதுரை 18; சிவகங்கை 17 ; ஈரோடு15 ; திருவண்ணாமலை, நீலகிரி 14; திருப்பூர் 11; தேனி மற்றும் வேலுார் 10; நாமக்கல்,விழுப்புரம் 9; பெரம்பலுார், கடலுார்,தென்காசி 8; நாகப்பட்டினம் 7; கிருஷ்ணகிரி,திருவாரூர் 6; ராமநாதபுரம் 4; திருப்பத்துார், புதுக்கோட்டை,கள்ளக்குறிச்சி, கரூர் 3;அரியலுார், தர்மபுரி, திண்டுக்கல்லில் தலா ஒருவரும் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிப்பு எதுவுமில்லாமல் மொத்தம் 1,484 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,71,289 ஆக அதிகரித்துள்ளது. இன்று 736 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,24,293 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு என்பது ஒரு நாள் அதிகரிப்பு மறுநாள் குறைவு என மாறி மாறி வருகிறது. நேற்று (27 ம் தேதி) 543 ஆக இருந்த நிலையில் இன்று (28 ம் தேதி)சென்னையில் 632 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.