May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

திருப்பதியில் ரே நாளில் ரூ.5.14 கோடி உண்டியல் காணிக்கை

1 min read

5.14 Crore Bills Offering on Ray Day in Tirupati

28.8.2022
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஒரே நாளில் 5 கோடியே 14 லட்சம் ரூபாய் உண்டியல் மூலம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

திருப்பதி கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். வார விடுமுறை நாள் என்பதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 5 கோடியே 14 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் கோயிலுக்கு 80 ஆயிரத்து 312 பக்தர்கள் வருகை தந்ததால், ஏழுமலையானின் காணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 5 கோடியே 14 லட்சம் ரூபாயை உண்டியல் காணிக்கையாகவும், 29 ஆயிரத்து 538 பேர் தலைமுடியை காணிக்கையாகவும் கொடுத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.