ரவனசமுத்திரம் பள்ளியில் வானவில் மன்றம் துவக்க விழா
1 min readRainbow Club Inauguration Ceremony at Ravanasamudram School
29.11.2022
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் இரவணசமுத்திரம் ஊராட்சி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் உத்தரவுப்படி வானவில் மன்றம் துவக்க விழா நடைபெற்றது.
ரவணசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர்கள் மேரி கிரேஸ் ஜெயராணி, குருசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன், மன்ற துணைத் தலைவர் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லி தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவுப்படி வானவில் மன்றத்தை ரவணசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் முகமது உசேன் துவக்கி வைத்து மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து இரவணசமுத்திரம் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆ. பிரான்சிஸ்கலா பலூன் ராக்கெட், பலூன் மேசை, பெர்னோலி பலூன் ஆகியவற்றை செய்து காட்டி விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் வெப்ப நிலை மாநில மிதக்கும் முட்டை ஆழம் அதிகரித்தால் அழுத்தம் அதிகரிக்கும் போன்ற எளிய சோதனைகளை செய்து காட்டி விளக்கி பேசினார்கள்.
அதனைத் தொடர்ந்து கணக்கு பட்டதாரி ஆசிரியர் கா.சுலைகாள் பேகம் பாகைமானி மற்றும் உருளையின் கூம்பும் செய்து காட்டி விளக்கம் அளித்தார் அதனைத் தொடர்ந்து மாணவர்கள் வட்டத்தின் சுற்றளவு மற்றும் முக்கோணத்தின் வகைகள் ஆகியவற்றை ஜியோ மெட்ரிக் பலகை மூலம் செய்து காட்டினார் இறுதியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் த.வ.ஜோளி அனைவருக்கும் நன்றி கூறினார்