May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

தாழ்வாக சென்ற மின்கம்பிகள் உரசியதில் 20 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்

1 min read

A 20 acre sugarcane plantation was burnt down when the power lines were cut

14.2.2023
விளை நிலங்கள் மேல் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் உரசியதில் 20 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து கருகியது.

கரும்பு தோட்டம்

பரமக்குடி அருகே உள்ள வெங்காளூர் கிராமத்தில் கருப்பையா, சந்திரன், பூமி ஆகிய 3 பேரும் தங்களுக்கு சொந்தமான விளை நிலத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கரும்பு தோட்டம் உள்ளது. நேற்று விளை நிலத்தின் மேல் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் திடீரென கரும்புகள் தீ பிடித்து எரிந்துள்ளன.
தகவல் அறிந்து பரமக்குடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இக் கிராம விளை நிலங்களின் மேல்பகுதியில் மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுபோன்று அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர். எனவே விளை நிலங்கள் மேல் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.