May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

அச்சன்புதூரில் தேசிய புலனாய்வு பிரிவு அதிரடி சோதனை; கணவன்-மனைவியிடம் தீவிர விசாரணை

1 min read

National Intelligence Squad action raid in Achanbutur; Serious investigation of husband and wife

15/2/2023
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பகுதியில் நேற்று அதிகாலையில் தேசிய புலனாய்வு பிரிவு ( என்ஐஏ) அதிகாரிகள் ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி அந்த வீட்டில் உள்ள தம்பதிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

கணவன் மனைவி

தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ், இவர் செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் – திருவெற்றியூர் பகுதியை சார்ந்த ஹைருன்நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் அச்சன்புதூர் பகுதியில் உள்ள செங்கோட்டை – கடையநல்லூர் சாலையில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கி வசித்து வருகிறார்கள்.
மேலும், அதே பகுதியில் மலர் என்னும் பெயரில் டைல்ஸ் விற்பனை செய்யும் கடையும் நடத்திவருகிறார்கள்..

இந்நிலையில் ஹைரூன் நிஷா செல்போன் எண்ணில் இருந்து கோவை குண்டுவெடிப்பு வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் செல்போனில் ஹைருன் நிஷாவின் செல்போன் எண் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

விசாரணை

அதன் காரணமாக ,தற்போது என்ஐஏ அதிகாரிகள் ஹைருன்நிஷா மற்றும் அவரது கணவர் அப்துல் அஜீஸ் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலை முதல் நடைபெற்று வரும் இந்த விசாரணை காரணமாக அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதனால், அச்சன்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது .

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.