May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

திருப்பத்தூர் அருகே நடைபெற்ற
எருது விடும் திருவிழாவில் மாடு முட்டியதில் 17 வயது சிறுவன் சாவு

1 min read

Held near Tirupattur-A 17-year-old boy died after being run over by a cow during the bull-riding festival

29/3/2023
திருப்பத்தூர் அருகே நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் மாடு முட்டியதில் 17 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தார்.

எருதுவிடும் விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை எடுத்த சாமுடி வட்டம் பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 2500க்கும் மேற்பட்ட காளையார்கள் மற்றும் ஊர்பொது மக்கள் கலந்து கொண்டு திருவிழா நடைபெற்று.

இந்த நிலையில் அச்சமங்கலம் அடுத்த பழனி வட்டம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் விக்ரம் (வயது 17) மாடு முட்டி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

பின்னர் எருது விடும் திருவிழாவில் இருந்த மருத்துவக் குழுவினர் விக்ரமின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் விக்ரமின் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறிய காட்சி அனைவரையும் கண்கலங்க செய்தது குறிப்பிடத்தக்கது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.