கடையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
1 min readProtest demonstration on behalf of Congress party at the shop
29.3.2023
ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் எம்பி பதவி பறிப்பு நடவடிக்கைகளை கண்டித்து தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் டி கே பாண்டியன் தலைமை வகித்தார். கடையம் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் முருகன், அழகுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்எஸ்யூஐ தேசிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான மாரி குமார் கண்டன உரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிமூலம் ,வட்டார மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி, வட்டாரத் துணைத் தலைவர் முருகன், மாவட்ட பொது செயலாளர் ராமையா ,தொழிற்சங்க தலைவர் அருணாச்சலம், வட்டார பொருளாளர்கள் சாத்தா, மாரியப்பன், செயற்குழு உறுப்பினர் பாபு, பழனி, மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் டி கே பாண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.