பாவூர்சத்திரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
1 min readA youth was arrested for sexually harassing a girl in Pavurchatra
30/3/2023
பாவூர்சத்திரத்தில் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். போக்சோ சட்டத்தின்கீழ் விக்னேசை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமியிடம் கடந்த 2022-ம் ஆண்டும் ஒரு வாலிபர் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது திருப்பத்தூர் மாவட்டம் திருமால்நகரை சேர்ந்த விக்னேஷ்(வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.