May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் பகுதியில் தொடர் மழை அருவிகளில் தண்ணீர்- சுற்றுலா பயணிகள்மகிழ்ச்சிகுளியல்

1 min read

Tourists enjoy bathing in the water in the continuous rain falls in Courtalam area

1.5.2023
தென்காசி மாவட்டம்,குற்றாலம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் விழத் துவங்கி உள்ளது.இதில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

கோடை மழை

நாடு முழுவதும் கோடை வெயில் கடுமையாக பொது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
ஆனாலும் மாலை நேரங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் மிதமான தண்ணீர் விழத் துவங்கி உள்ளது.

கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் குற்றாலம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் அருவிகளில் விழும் விதமான தண்ணீரில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் குற்றாலம் பகுதியில் உள்ள குண்டாறு அணை அடவினார்அணை கருப்பாநதி அணை உள்ளிட்ட அணைகளுக்கும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.