கடையம் ஒன்றிய பகுதியில் திமுக கொடியேற்று விழா
1 min readDMK flag hoisting ceremony in Kadayam union area
27.6.2023
தென்காசி தெற்கு மாவட்டம்
கடையம் தெற்கு ஒன்றியத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர்
பொ.சிவபத்மநாதன் 6 இடங்களில் திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 இடங்களில் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் 8 இடங்களில் கல்வெட்டுடன் திமுக கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இதில் கடையத்தில் முதல் 2 கொடிகளை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இரவணசமுத்திரம், ரெயில்வே கேட், மாலிக்நகர், வீராசமுத்திரம், நாணல்குளம், வாகைகுளம் ஆகிய 6 இடங்களில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கடையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாநில பேச்சாளர் முத்துச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகாரிமீரா சாகிப், சசிகுமார், மோகன், ரவீந்திரன், யானை மீரான், அர்ச்சுணன், அரவிந்த், எல்அன்ட்டி முருகன், சுரேஷ், வின்சென்ட்பால், மகேஷ் பாண்டியன், மகேந்திரன், அகமதுஈசாக், மேசியாசிங், சுந்தரம், அவைத்தலைவர் பக்கீர்மைதீன், துணை செயலாளர்கள் வின்சென்ட், முல்லையப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வளர்மதி சங்கரபாண்டியன், ஜன்னத் சதாம்உசேன், ஜீனத்பர்வீன் யாகூப், ஒன்றிய கவுன்சிலர்கள் சுந்தரி மாரியப்பன், ஜஹாங்கீர், மாவட்ட கவுன்சிலர் மைதீன்பீவி கோதர்மைதீன், ஆழ்வார்குறிச்சி பேரூர் செயலாளர் அழகேசன், பேரூராட்சி கவுன்சிலர் சக்தி சுப்பிரமணியன், நாகூர் மீராள்ஒலி, லதா தங்கத்துரை, கிளை நிர்வாகிகள் ஹயாத், சுப்பிரமணியன், காதர், குமார், பாஸ்கர், இலஞ்சி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.